தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் – அஸ்ட்ரா செனெகா நிறுவனம் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா செனெகா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படக் கூடும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நிறுவனத்தின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தடுப்பூசி தயாரிக்கும் அளவு குறைவடைந்துள்ள காரணத்தினால் ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளின் அளவு குறைக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி ஏற்கனவே பிரித்தானிய முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், இதற்கு இன்னும் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
65 இலட்சம் மக்கள் காசநோயால் பாதிப்பு - சுகாதார கல்விப் பணியகம்!
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து!
நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு!
|
|