டெங்கு நோயினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், கடந்த 7 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 279 பேராக அதிகரித்துள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இந்நிலையில் கடந்த இரு வாரங்களில் 10 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
அனைத்து இந்துக்களுக்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள ம...
சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரும் விடயத்தில் சட்ட நிறுவனங்களை அணுகியது நிதி அமைச்சு!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நன்கொடையாக இலங்கை தேயிலை!
|
|