டெங்கு தொற்று – அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் –
யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது.
எனவே பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எமது மாவட்டத்தில் மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீர்க் கட்டணம் அதிகரிக்கும்
சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு – இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங...
இந்தியா நிதியுதவி - நவம்பர்முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை - அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று சம...
|
|