டிசெம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வை வழங்க முடியும் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

டிசெம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஓரளவிலான தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்நாட்டிற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி மருந்துப் பற்றாக்குறையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை முதலீட்டை வலுப்படுத்தும் மாநாடு ஜப்பானில்!
தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் - சுங்க திணைக்களம் எச்சரிக்கை!
பூரண தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் 30 க்கு பின்னர் அமுல் - சுகாதார சேவைகள் பணி...
|
|