டக்ளஸ் தேவானந்தாவுக்கு சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் முருகன் சிலை வழங்கி ஆசீர்வாதம்!

Wednesday, October 19th, 2016

மலேசிய பத்துமலை முருகன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட முருகன் உருவச் சிலையினை சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபுசர்மா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார்.

கொழும்பிலுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் வைத்து முருகனின் உருவச் சிலை இன்றையதினம் (19) கையளிக்கப்பட்டது.

unnamed (2)

மலேசியாவுக்கு ஆன்மீகப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபுசர்மா பத்துமலை முருகன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட முருகன் உருவச் சிலையினை பெற்றுவந்து அதனை டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்து ஆசீர்வதித்தார்.

உலகிலேயே 140 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய முருகன் சிலை மலேசியாவில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

 

Related posts:

யாழ்ப்பாணத்தில் 1,729 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்: தாவடியில் 300 குடும்பங்கள் நேரடிக் கண்காணிப்பில் ...
இலங்கையின் சிறந்த பங்காளியாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை காணப்படுகிறது - இந்திய உயர் ஸ்தா...
பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு - இரண்டாம் வாசிப்பு மீதான...