ஜூலை 31முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம்!

தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை திருப்பி நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை ஜூலை 31ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை இழப்பு மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் நாடுகளில் தங்குமிட வசதிகளை இழந்துள்ளனர் என்றும் மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டிய நிலையில் சுமார் 6,000 முதல் 8,000 பேர் இருப்பதாகவும் வெளிவிவகார ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் முதலாவது விமானப் பயணம் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் கொரோனாவினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்வு!
குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்...
மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானம் – கூடுகின்றது அமைச்சரவை !
|
|