ஜனாதிபதி தேர்தல்: அதுவரை 375 முறைப்பாடுகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு!

கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 375 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியமை தொடர்பில் 360 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 9 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் என்பனவற்றில் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா - உறுதி செய்து அனுராதபுரம் வைத்தியசாலை!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – எச்சரிக்கம் வானிலை அவதான நில...
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
|
|