ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் – அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் தான் அதனையும் ஏற்க தயார் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தெரிவித்துள்ளது.
புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் புதிய அமைச்சரவையை உருவாக்கவும் இணங்கியுள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழர் அரசியல் உரிமைப்போராட்டத்தை சரியான வழியில் நகர்த்தியவர் டக்ளஸ் தேவானந்தா - ஈ.பி.டி.பியின் ஜேர்...
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு!
புத்தாண்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த நம்பிக்கை!
|
|