ஜனாதிபதியுடன் புதிய தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் சந்திப்பு!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் நேற்று (14) இடம்பெற்றது. இலங்கைக்கென நியமிக்கப்பட்டுள்ள உக்ரேன், பூட்டான், எதியோப்பியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் தென்னாபிரிக்கா மற்றும் சீசெல்ஸ் நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை இதன்போது ஜனாதிபதியிடம் கையளித்தனர். இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஸ த சில்வா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related posts:
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம்!
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்கள்!
கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் அபாயமுள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கள் நுழைந்த பயணிகளை கண்டறிய நடவடி...
|
|