ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பில் இதுவரை முடியாகவில்லை – இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரகம் தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சீனாவிற்கான உத்தியோகபூர்வ பயண நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை என இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரகம் அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் தொலைபேசி மூலமாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவுக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஷி ஜின் பிங் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரகப் பேச்சாளரும் அரசியல் பிரிவுத் தலைவருமான லூ சொங் இவ்விடயம் பற்றி தெரிவிக்கையில், இருநாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையில் சம்பாசனை இடம்பெற்றது.
இதனையடுத்து ஜனாதிபதி ஷி ஜின் பிங்கினால் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீனாவுக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது வரையில் அதற்கான எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்படவில்லை. கொரோனா நிலைமைகள் சுமூகமடைந்ததை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி பதவியை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியாவைத் தவிர கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரையில் வேறெந்த நாட்டிற்கும் விஜயம் செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|