ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 13 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடாக இருந்தது. எரிபொருட்களில் சிக்கல் ஏற்பட்டது.
அத்தியாவசிய மருந்துகளில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது நாடு படிப்படியாக நிலைபெற்று வருகிறது.
ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவர் பணி நீக்கம் - ஜனாதிபதி
வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்தப்படும் - மீறுபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை என பிரத...
தாய்வான் எல்லையில் தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக சீனா அறிவிப்பு!
|
|