சேவையிலிருந்து விலகிய 10,000 தனியார் பேருந்து ஊழியர்கள் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய ரீதியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் பேருந்து சேவையாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது வரையில் சுமார் 10 ஆயிரம் சேவையாளர்கள் சேவையிலிருந்து விலகி, வேறு தொழில்களை நாடியுள்ளனர்.
இதன் காரணமாக, தனியார் பேருந்து தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் கடும் வறட்சி; அதிகமான மக்கள் பாதிப்பு!
தனியாரிடமிருந்து மின் கொள்வனவு தொடர்பில் விசேட குழு!
காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை - பிரதிக் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
|
|