சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லை – பொலிஸ் ஊடக பேச்சாளர்!

நாட்டில் மேற்கொள்ளப்படும் விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், பொதுமக்கள் இந்தச் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!
எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ?
கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்க இலங்கைக்கு சீனா நன்கொடை!
|
|