சுயநலன்களுக்காக மாணவர்களின் கல்வி பறிப்பு : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

கல்வித்துறை சார்ந்த சில உத்தியோகத்தர்கள் தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கான கல்வி உரிமைகளை மீறுவதாக தேசிய கல்வி ஊழியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.
சில உத்தியோகத்தர்கள் பாடசாலையை மூடுமாறு அதிபர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் என்று தேசிய கல்வி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாமென ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேமசிறி ரத்னாயக்க தெரிவித்தார்.
Related posts:
கடந்த அண்டில் உலகெங்கிலும் ஊடக சுதந்திரம் வீழ்ச்சி!
கிராம சேவையாளர் பதவிக்கு 2000 வெற்றிடங்கள்!
பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் -சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவ...
|
|