சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண!

தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த முயற்சிப்பதாக பிரதி பொலீஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
.அவர் தெடர்ந்து தெரிவிக்கையில் – பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க இன்றையதினம் நாங்கள் வடக்கிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறோம்.
அதேபோல் வவுனியாவுக்கும் செல்லவுள்ளோம். இன்று வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்தவுள்ளோம். அதில் பல்வேறு விடயங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
எமக்கு தற்போது உள்ள ஒரு பிரச்சனை கொவிட் 19 வைரஸ் பிரச்சினை ஆகும். இது நாடளாவிய ரீதியில் உள்ள ஒரு பிரச்சனை. உலக சுகாதார ஸ்தாபனம் எப்போது கொவிட் 19 இல்லை என அறிவிக்கின்றதோ அப்போது வரை இந்த கொரானா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் காணப்படும்.
எனவே அந்த நிலையிலும் எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் நாம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம். அதாவது தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பின்பற்றி எதிர்வரும் தேர்தலை நடத்த முயற்சிக்கின்றோம் என்றார்.
Related posts:
|
|