சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!

சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
முதற்கட்டமாக ஜூன் மாதம் 6ஆம் திகதியளவில் 10 இலட்சம் தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்க முடியும் என சீனா தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
அதனையடுத்து இரண்டு வாரங்களின் பின்னர் மீதமுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகளும் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.
இதனிடையே ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர், சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.
Related posts:
வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று!
ஐரோப்பிய குழுவினர் இன்று இலங்கை வருகை!
இலங்கையின் ஆசியாவின் இராணியை சொந்தமாக்குவதில் வல்லாதிக்க நாடகளிடையே கடும் போட்டி!
|
|