சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இன்றுமுதல் இந்நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி இன்றுமுதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பானத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று பிற்பகல் 2 மணிமுதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா அரசாங்கத்தால் இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளின் ஒரு பகுதி இந்நாட்டில் வசிக்கும் சீனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே- 2 ஆம் திகதியை வர்த்தக விடுமுறையாகப் பிரகடனம் செய்யுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ் ....
மீதொட்டமுல்ல சம்பவம் : தகவல்களை வழங்குமாறு ஆணைக்குழு கோரிக்கை!
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிளைபோசைட் கிருமி நாசினிக்கு தடை தளர்வு!
|
|