சிவில் சமூகம் – இராணுவம் இடையிலான உறவு மூலம் இலக்குகளை அடைய முடியும் – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண!

கல்வியின் மூலம் சிவில் சமூகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை ஊக்குவிக்க முடியும் என்பதோடு , இதன் மூலம் உலகளாவிய இலக்குகளை இலகுவாக அடைய முடியுமென்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இரத்மலானையிலுள்ள ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துதள்ளார்.
அத்துடன் மக்கள் மத்தியில் ஒருமைப்பாடு, ஜனநாயக பங்கேற்பு, பொருளாதார சமத்துவம், பரஸ்பர புரிதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை பல்கலைக்கழக கல்வியூடாக வளர்க்க முடியுமென்பதை மனதில் கொள்ள வேண்டுமென்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
5 வது நாடாக சார்க் மாநாட்டை புறக்கணித்தது மாலத்தீவு!
வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிருபம் -நீதிச் சேவைகள் ஆணைக்குழு!
நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை - மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவ...
|
|