சிறுவர்களுக்கான உகந்த இடங்களை உருவாக்கவேண்டும்! -ஜனாதிபதி

குடும்பம், பாடசாலை, மற்றும் சமூகம் உட்பட்ட அனைத்து இடங்களும் சிறுவர்களுக்கு உகந்த இடங்களாக மாற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளில் இருந்து விடுபட்ட நாடாகஇலங்கையை உருவாக்குவதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முதியவர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுடன் கௌரவத்தைபாதுகாப்பது அனைவரினதும் கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை!
சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுங்கள் – பொதுமக்களிடம் சுகாதார அமைச்சர் வேண்டுகோள்!
புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் கோரிக்கை!
|
|