சிறப்பு அதிதிகளின் வாகனங்களுக்கு புதிய சட்டம்!

Monday, January 30th, 2017

உரிய அனுமதிப்பத்திரத்தை பெற்ற பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது முக்கிய பிரமுகர்கள் தமது வாகனங்களுக்கு கறுப்பு கண்ணாடிகளை பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனுமதிப்பத்திரத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என வாகன விவகாரங்கள் தொடர்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அனுமதிப் பத்திரங்களை பெறாது நாடாளுமன்ற உறுப்பினரோ, முக்கிய பிரமுகரோ தமது வாகனங்களுக்கு கறுப்பு கண்ணாடியை பயன்படுத்தினால், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

is-6-2-300x224

Related posts: