சித்திரைக்கு முன்னர் இலங்கையில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் – ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க!

Tuesday, January 5th, 2021

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதற்கான கலந்துரையாடல் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: