சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வாகனப் பதிவு, ஒழுங்குமுறை, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
செயல்முறைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சுக்கள் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி: கைச்சாத்தானது ஒப்பந்தம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச - கியூப தூதுவர் இடையே சந்திப்பு – இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் ...
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கதாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்தினர்...
|
|