சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

Friday, July 31st, 2020

2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை இணையத்தளம் மூலமாகவே பெற்றுகொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் பாடசாலை பரீட்சாத்திகள் தமது பாடசாலை அதிபர் மூலம் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக தமது விணண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: