சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தகவல்!

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு, பத்தரமுல்லவில் அமைந்துள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பல அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவை தேவைகளைக் கொண்ட தனிநபர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட் ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அதற்காக குறைந்த அளவிலான ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது..
Related posts:
உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்!
மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூல இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!
நாளாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் இழப்பு - இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!
|
|