சவுதி அரேபியாவில் பாரிய விபத்து – இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம்!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 4 அமெரிக்க படையினர் மற்றும் இலங்கையர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Khubari Al-Awazem பகுதியில் அமெரிக்க படையினர் ஓட்டிய இராணுவ வாகனம், ட்ரக் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 4 அமெரிக்க படையினரும் பாரிய காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இராணுவ வீரர்கள், அமெரிக்க தளமாக கொண்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு இலங்கையர்களும் Jahra வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Related posts:
ஐ.நாவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?
யாழ் மாநகர நிதிக்குழு விவகாரம்: ஏனைய குழுக்களிலிருந்தும் வெளியேறும் நிலை உருவாகும் - ஈ.பி.டி.பியின் ...
எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் நாடளாவிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் மாற்றம் - சுகாதார சேவைகள் பணி...
|
|