சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு – அமைச்சர் மங்கள சமரவீர!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், முற்போக்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Related posts:
வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை இல்லை!
கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு ...
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|