சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நிபுணத்துவ பகிர்வு மற்றும் பொதுவான சட்ட அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கான சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா “கிரிப்டோ கரன்சிகளின் நிதி பயங்கரவாதத்திற்கு எதிரான பயன்பாடு” தொடர்பில் இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி செய்தி நிறுவனமான ஏசியன் நியூஸ் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிராந்திய வல்லுநர்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த மாநாடொன்றிற்கு ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை – ; “தெற்காசிய பிராந்தியத்தின் சர்வதேச எல்லைகளில் பயங்கரவாதிகள் மற்றும் குற்றச் செயல்பாட்டாளர்களின் நாடுகடந்த மற்றும் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு, பொதுவானதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான கொள்கைகளுக்கமைவான அடிப்படையில் சட்டத்தை அமுலாக்கும் நிறுவன உட்கடமைப்பொன்றை உருவாக்க வேண்டியது அவசியமென இலங்கை பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பயங்கரவாதம் அல்லது கூட்டு வன்முறைச் செயற்பாடுகளை எதிர்ப்பது தொடர்பில் அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படும் நியாயமான முயற்சிகள் தொடர்பில் தெற்காசிய பிராந்திய ரீதியிலான ஒப்பந்தமொன்றை கைசாத்திட வேண்டியதன் அவசியம் பற்றிய கலந்துரையாடல்களை மேம்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.
மேலும், அதற்கான தீர்மானங்களை நிறுவன கட்டமைப்பொன்றின் கீழ் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் மற்றும் நிபுணத்துவ தெரிவுகளை பறிமாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் “எங்கள் பிராந்தியத்தின் சர்வதேச எல்லைகளில் பயங்கரவாதிகள் மற்றும் குற்றச் செயல்பாட்டாளர்களின் நாடு கடந்த மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிகள் என்பன அவசியம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்காக சுங்க திணைக்கள சோதனைச் சாவடிகளில் தகவல் பரிமாற்ற பொறிமுறைகளை நிறுவுதல், குடியேற்றச் செயற்பாடுகளுக்கான தடைகளை விதித்தல் மற்றும் ஆயுதங்கள், போதைப்பொருட்கள், போர் கருவிகள், ஆபத்தான பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் சேமித்து வைத்தல் போன்ற செயற்பாடுகளை தடுப்பதற்கான ஒத்துழைப்புக்கள் அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.
அதன்படி, சந்தேநக நபர்கள் தொடர்பிலான சாட்சியங்களை சேகரித்தல், தேடப்படும் நபர்கள் தொடர்பிலான தகவல்களை பரிமாற்றிக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளூடாக ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ள முடியுமென தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, பயங்கரவாத மற்றும் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கையாளுதல் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்புக்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அதேபோல் பிராந்திய நாடுகள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டத்தின் போது நாடுகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டுத் தன்மை மிகவும் அவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|