சமுர்த்தி திணைக்களத்தில் 7000 பேருக்கு நிரந்தர நியமனம்!

சுமார் 7000 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நேற்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அதிகாரசபையாக இருந்து சமுர்த்தி திணைக்களமாக்கப்பட்டதன் பின்னர் குறித்த திணைக்களத்திற்கு 27,000 பேருக்கு நியமனம் வழங்கப்படாதிருந்த நிலையில் அதன்முதற்கட்ட நடவடிக்கையாக 7000 பேருக்கு குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இந்த நியமனக் கடிதங்களை வழங்கிவைத்த இந்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் சமூகநலன்புரி அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துகலாசார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாட்டின் வறுமை ஒழிப்பின் ஆரம்ப புள்ளியாகும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிப...
சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் - ,மோட்டார் வாகன போக்குவரத்து த...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி கோரட்டப...
|
|