சனிக்கிழமையன்று போட்டிப் பரீட்சை!

வடமாகாணக் கல்வி வலயங்களில் நிலவும் பாடரீதியான ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
வடமாகாண அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கமைவாக ஆசிரிய ஆலோசகர் தெரிவுகள் போட்டிப் பரீட்சை அடிப்படையில் நடைபெறவுள்ளன. போட்டிப் பரீட்சை யாழ்.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடத்தப்படும். பரீட்சைக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் கிடைக்க பெறாதோர் 10ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.10 மணிக்குப் பின்னர் மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாகாணசபை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
இராணுவம் போர்க்குற்றம் எதனையும் புரியவில்லை – பாதுகாப்புச் செயலர் உறுதி!
கொரோனா தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் !
மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை - மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப...
|
|