சட்டவிரோத மணல் அகழ்வு; தர்மபுரத்தில் ஐவருடன் உழவு இயந்திரங்களும் பறிமுதல்!

கிளிநொச்சி – கல்மடு குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதற்கமைய, இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை கைதுசெய்துள்ளதுடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 5 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய நல்லிணக்கம் வலுப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி!
தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
மக்களின் தேவையறிந்தே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுப...
|
|