சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க கால அவகாசம்!

‘சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை திருப்பி மீளளிப்பதற்கான பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மே மாதம் 06ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது’ என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார் ‘
இக்காலத்தில் தம்மிடம் இருக்கும் துப்பாக்கிகளை திருப்பி கொடுப்போருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பனவுகள் வழங்கப்படும். பொது மன்னிப்பு காலத்துக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் அதனையடுத்து முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையில் கைதுசெய்யப்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
யாழ்.பல்கலை பொறியியல் பீடம் 26ஆம் திகதிமுதல் ஆரம்பம் - பதிவாளர் அறிவிப்பு!
இந்த தேசம் தமது நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தவில்லை – டெலிகொம் மற்றும்...
அதிவேகம் – கட்டுப்பாட்டை இழந்து கல்லுண்டாயில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்தது!
|
|