சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து, சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்போது, மூன்று மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (7) இரவு நெடுந்தீவுக்கு அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த 11 இந்திய மீனவர்களையும் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பலாலிவிமான நிலையம் மயிலிட்டித் துறைமுகத்தின் விஸ்தரிப்புப் பணிகளுக்காகப் பொதுமக்களின் நிலங்களைச் சு...
5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து - மருத்துவர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
|
|