சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் வழமைபோல இடம்பெறுகின்றன – இலங்கை துறைமுக அதிகார சபை அறிவிப்பு!

நாடளாவிய ரீதியாக உள்ள சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் தற்போது வழமைபோல மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் தெற்காசிய நுழைவாசல் இறங்குதுறை, சர்வதேச கொள்கலன் இறங்குதுறை மற்றும் ஜெயா கொள்கலன் இறங்குதுறை என்பன வழமைபோல கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, துறைமுக தொழிலாளர்கள் கடமைக்கு வரும் வகையில், துறைமுகங்களுடனான போக்குவரத்து வசதியும் தற்போது வழங்கப்படுவதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதியிடம் தீர்வுகோரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
கருப்பு பெட்டியை தர மறுக்கும் ஈரான்!
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அ...
|
|