கோர விபத்தில் 3 பேர் பலி!

குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.வான் ஒன்றும், பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் வானின் சாரதியும் ஒரு குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள், தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு டெங்கு நோயின் தாக்கமும் இலங்கையில் உச்சம் பெறும் – எச்சரிக்கை விடுக...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கை வருவதில் தாமதம் ஏற்படாது - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது!
|
|