கோர விபத்தில் 3 பேர் பலி!

குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.வான் ஒன்றும், பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் வானின் சாரதியும் ஒரு குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள், தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தெரிவிப்ப...
சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – அரசாங்கம் தகவல்!
நாடாளுமன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் 11 பேரடங்கிய குழு நியமனம்!
|
|