கோதுமை மா நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் பி.ஹெரிசன்!

கலந்துரையாடல் முடிவடையும் வரையில் கோதுமை மாவினை முன்னர் இருந்த விலையிலேயே விற்பனை செய்யுமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோதுமை மா நிறுவனங்கள் தங்களுக்கு அறிவிக்காமல் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா நிறுவனங்கள் கூறுவது போன்று டொலரின் விலை கடந்த வருடங்களில் அதிகரித்த போதும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதனால் அவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சட்ட ரீதியாக கோதுமை மா நிறுவனங்கள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்தது ஜப்பான்!
அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களை போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்க...
|
|