கொவிட் 19 வைரஸின் சீற்றம் தணியும் அறிகுறி இல்லை – உலக சுகாதார நிறுவனம் !

உலகலாவிய ரீதியில் புதிய கொவிட் 19 வைரஸின் தொற்றுக்கு இலக்காகி வருபவர்களினதும் மரணம் அடைபவர்களினதும் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு நோக்கும்போது அதன் சீற்றம் தனிவதற்கான அறிகுறி இல்லை.
உலக சுகாதார நிறுவனம் நேற்று மாலை வெளியிட்ட விபரங்களின் பிரகாரம் இதுவரையில் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சமாக அதிகரித்துள்ளது.
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,000 க்கும் மேல் அதிகரித்துள்ளது. சீனாவில் வைரஸின் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பெய்ஜிங் அறிவித்திருக்கின்ற அதே வேளை ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புதிதாக தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகின்றது.
நியூயோர்க்கில் ஆயிரம் பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் அல்லது ஏனைய பகுதிகளையும் விட ஐந்து மடங்கு கூடுதலாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் வைரஸ் நெருக்கடி ஒருங்கிணைப்பாளரான டிபோரா எல். பிறிக்ஸ் கூறியிருக்கிறார்.
வைத்தியசாலைகளில் கட்டில்களின் தொகையை 50 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு நியூ யோர்க் ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.
Related posts:
|
|