கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து – 50 வீடுகள் சேதம் என பொலிஸார் தகவல்!

கொழும்பு – கிராண்ட்பாஸ், பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவம் பொலிஸாஸ் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கிராண்ட்பாஸ், கஜிமாவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றின், ஒளிரும் விளக்கு ஊடாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை தீயைக் கட்டுப்படுத்த சுமார் 5 தீயணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டில் 1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமே உள்ளனர்!
கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளம் குடும்பஸ்தர் மரணம்!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: இலங்கையில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு!
|
|