கொழும்பிற்கு பிரவேசிக்கும் கனரக வாகனங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

பண்டிகைக்காலத்தில் கொழும்பிற்கு பிரவேசிக்கும் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்பிரகாரம் இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை கனரகவாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மாலை வேளையில் வாகன நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டிகைக்காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் கவலைக்கிடம்!
அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமது நிரந்தர பணியிடத்தில்...
டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை !
|
|