கொழும்பிற்கு பிரவேசிக்கும் கனரக வாகனங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

பண்டிகைக்காலத்தில் கொழும்பிற்கு பிரவேசிக்கும் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்பிரகாரம் இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை கனரகவாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மாலை வேளையில் வாகன நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டிகைக்காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தை திருத்த தீர்மானம்!
பேருந்து போக்குவரத்து அட்டவணையில் மாற்றம்?
இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த இணைந்து பயணிக்க தயார் - ஜோ பைடனுக்கு பிரதமர் மஹிந்த வாழ்த்து!
|
|