கொரோனா தொற்று – யாழ். போதனாவில் மற்றுமொரு மரணம் பதிவு!
Monday, April 19th, 2021கொரோனா தொற்று காரணமாக யாழில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியை சேர்ந்த 59 வயதானவரே யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 77 வயதானவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த இருவரது சடலங்களும் சுகாதார விதிமுறைகளின் கீழ் மின் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!
´உறுதியான நோக்கம் - தொழில் செய்யும் நாடு´ : வெளியானது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவின் தேர்தல்...
அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துங்கள்: மக்களுக்காக அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம...
|
|
பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் ...
தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் தெரியாது! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு
மண்டைதீவிலும் 150 பயனாளர்களுக்கு தென்னம் பன்றகள் விநியோகம் - தீவகத்தில் பசுமையை ஏற்படுத்த சிறீன்லேய...