கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 915ஆக உயர்வு – தொற்றாளர்களில் 480 பேர் கடற்படை சிப்பாய்கள் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு மேலும் 26 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 382 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் இலங்கையில் 09 பேர் குறித்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதுவேளை நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 26 பேரும் கடற்படைச் சிப்பாய்களென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 915 பேரில் 480 பேர் கடற்படைச் சிப்பாய்களென்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு கிழக்கில் பெண்களை உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா - கிளிநொச்சியில் யாழ் மாநகர...
நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திலீபன் அவர்களின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக...
சகல அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் பரவலாக்குவது காலத்தின் அவசியமாகும் - ஜனாதிபதி கோட...
|
|