கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்தது – பலியானோர் எண்ணிக்கையும் 15 ஆயிரத்து 515 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 14 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 515 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தர் தெரிவு!
பாணின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் - வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை புதிய வருட...
|
|