கொரோனா தாக்கத்தால் இடைநிறுத்தப்பட்ட இலங்கக்கான பயண எச்சரிக்கையை தளர்த்தியது பிரித்தானியா!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை நேற்றுமுதல் தளர்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுகள் மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும் அத்தியாவசிய பயணங்களுக்கு மாத்திரம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பிரத்தானியா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கின்றது,
கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுகள் மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அத்தியாவசிய சர்வதேச பயணங்கள் தவிர்த்து ஏனைய பயணங்களை இயன்றளவு தவிர்க்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுகள் மற்றும் பொதுநலவாய அலுவலகம் பிரித்தானிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவுப்பேருரைநிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுசிறப்பிப்ப...
யாழ்.மாநகரில் கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு குறித்து ஆராய்வு!
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
|
|