கொரோனா சிகிச்சைக்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை – உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ். கைத்தடி, பொரளை, ஹம்பாந்தோட்டை மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளும் இவற்றில் அடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய 24 ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படுகின்ற வைத்தியசாலைகளாகும்.
குறித்த 28 வைத்தியசாலைகளிலும் 2 ஆயிரத்து 500 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது - கட்சியின் கிளிநொச...
முற்றுமுழுதாக பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் சிங்கப்பூரை சென்றடைந்தது!
இவ்வாண்டு 120 ஆயிரம் இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் – துறைசார் அமைச்சு தகவல்!
|
|