கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!

அனைத்து அரச ஊழியர்களும் இன்றுமுதல் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர் ஜி. ஜி.ரத்னசிறியின் கையொப்பத்துடன் அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொவிட் -19 பரவல் காரணமாக அரச பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், சுகாதார வழிகாட்டுதல்களுடன் அரச அலுவலகங்களின் பணிகளை முன்னெடுக்க தேவையான பணியாளர்களை மாத்திரம் அழைக்கும் அதிகாரம் நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், இன்றுமுதல் வழக்கம் போன்று அனைத்து அரச ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதனடிப்படையில் இன்று ஊழியர்கள் தமது கடகைளுக்காக அலுவலகங்களுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு!
நாட்டில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க சுகாதார அமைச்சு யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
ஒக்சிஜன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரி...
|
|