கொரோனா அச்சுறுத்தலால் வேலை இழந்தவர்களின் தகவல் சேகரிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பணியாற்றிய நிறுவனம், பணியில் இருந்து நீக்கப்பட்ட திகதி, பணியாற்றிய காலம், இறுதியாக பெற்ற சம்பளம் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கி, தொழில் ஆணையாளர், 11ஆவது மாடி, கொழும்பு 15 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த விபரங்களை எதிர்வரும் 01 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112368502 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
000
Related posts:
வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரி - புடின் கலந்துரையாடல்!
ஆயுள் கைதிகளுக்க சலுகை வேண்டும் - சிறைக் கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பு கோரிக்கை!
யாழில் கடந்த 23 நாட்களில் 72 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
|
|