கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட 104 பாடசாலைகளும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட 147 பாடசாலைகளும் என மொத்தமாக 251 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் - ஜனாதிபதி
இன்றிலிருந்து மேலும் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் – வாநிலை அவதான நிலையம்!
இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து - பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக...
|
|