கைமாறியது விமானங்கள்!

பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் இருந்து ஏ-330 ரகவிமானங்களை குத்தகை பெறும் வகையிலான உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலாவது விமானம் அடுத்த வாரம் பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 2 விமானங்கள் எதிர்வரும் மாதங்களில் கையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இரட்டைக் குடியுரிமை மேலும் 1700 பேருக்கு!
அனைத்து சமூகங்களும் சமவுரிமையுடன் வாழ்வதற்கான வேலைத்திட்டம் - அமைச்சர் மங்கள சமரவீர!
காய்ச்சல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை !
|
|