குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இரத்து!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிரதான பொலிஸ் பரிசோதகரினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு ஆராயப்பட்ட போதே குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின்றி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட குறித்த பொலிஸ் பரிசோதகர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாளை மின்சாரம் தடைப்படும்!
புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு : யாழ் மாணவர்கள் இருவர் முதலிடம்!
யாழ்ப்பாணத்தில் மத்தியதர குடும்பங்களின் நலன் கருதி வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பித்து வைப்பு!
|
|