குருநாகல் இந்து தழிழ் மகா வித்தியாலத்தில் கலைத்தறைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

Tuesday, May 30th, 2017

குருநாகல் மாவட்டத்திலுள்ள இந்து தழிழ் மகா வித்தியாலத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கலைத்தறைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைச் சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.

இப்பாடசாலையில் கலைத்துறையை ஆரம்பிக்குமாறு பாடசாலைச் சமூகத்தினரும்;ரூபவ் பெற்றோர்களும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கல்வியமைச்சால் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கலைத்துறைப்பிரிவு

ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடசாலைச் சமூகத்தினரும்ரூபவ் பெற்றோர்களும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பாடசாலையில் உயர்தரம் கற்க விரும்புபவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்திக்

கொடுக்கப்படவுள்ளதாகவும்ரூபவ் அதனூடாக குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் நன்மையடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: