குடியுரிமை சட்டத்தைக் இறுக்கியது அவுஸ்திரேலியா!

ஆங்கிலப் புலமை பெற்றவர்களும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் மட்டுமே அவுஸ்திரேலிய குடிமக்களாக இருக்க முடியும் என அந்நாட்டுப் பிரதமர் மல்கம் டேர்ன்புல் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, அவுஸ்திரேலிய குடியுரிமை சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.புதிய விதிப்படி குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அவுஸ்திரேலியாவில் வசித்தவராக இருக்க வேண்டும் என்பதுடன் ஆங்கிலப் புலமை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், குடியுரிமைக்கான ஆங்கிலத் தேர்வில், பெண்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைத் திருமணம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். இது தவிர, அவுஸ்திரேலியாவைப் பற்றிய மதிப்பீடுகள் தொடர்பான கேள்விகளுக்கு மிக சிறந்த பதில்கள் அளித்தால் மட்டுமே குடியுரிமை கிடைக்கும்.புதிய விதிமுறைப்படி ஒருவர் 3 முறை மட்டும் விண்ணப்பிக்கலாம். மூன்றாவது முறையும் குடியுரிமை தொடர்பான தேர்வில் தோல்வியடைந்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படாது.
Related posts:
|
|